நீ
நிலா அல்ல..
நதி அல்ல..
பூ அல்ல..
பொன் அல்ல..
பெண்..!
நீ பறக்க
நான் சிறகாய் இருக்க மாட்டேன்
உன் சிறகு விரிக்க
சொல்லித் தருகிறேன்
கண்ணை இமையாக
காப்பதல்ல என் காதல்..
காற்றைப்போல சுதந்திரம் தருவது
எதற்கும் என் அனுமதி கேட்காதே..!
முடிந்தால் தகவல் சொல்..
போதும்..!
உன் உணவு
உன் உடை
உன் நட்பு
உன் நேரம்
எதையும் எனக்காக நீ இழக்க வேண்டாம்
என் உயிரல்ல நீ
உடல் மறையும் வரை என்னோடிருக்க...
உனக்கு என்னைப் பிடிக்கும் வரை மட்டும் என்னோடிரு..
போதும்..!
நான் ஆண்
நீ பெண்
உடற்தேவைகளின் போது மட்டும்..
மற்றபடி...
நீயும் நானும் சகமனிதர்கள்...!
No comments:
Post a Comment