Monday, October 11, 2010
Saturday, August 28, 2010
கடவுள்
கண்திறந்து பார்க்கும் சாமி
என நம்பி
கண்மூடித் தவமிருக்கும் மூடனே
கண் திறந்து பார்..
கடவுளே நீதான்
என்றுணர்வாய்.
என நம்பி
கண்மூடித் தவமிருக்கும் மூடனே
கண் திறந்து பார்..
கடவுளே நீதான்
என்றுணர்வாய்.
உலகம் அழியட்டும்
மதத்தின் பெயரால்
இனத்தின் பெயரால்
நிறத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
ஆளாளுக்கு
அடித்துக்கொண்டு சாவதை விட
2012- இல்
உலகம் அழிந்து போகட்டும்.
மதம் இனம் நிறம் மொழியற்ற
புதியதோர் உலகு பிறக்கட்டும்
அங்கு
ராஜபக்க்ஷே ஹிட்லர் போன்றோரும்
அநியாயத்தைக் கண்டு பொங்காமல்
எழுதிக் கிழிக்கும்
படித்து ரசிக்கும்
நம் போன்ற
கேடுகெட்ட மனிதரெல்லாம்
கருவிலேயே கலைந்து போகட்டும்.
இனத்தின் பெயரால்
நிறத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
ஆளாளுக்கு
அடித்துக்கொண்டு சாவதை விட
2012- இல்
உலகம் அழிந்து போகட்டும்.
மதம் இனம் நிறம் மொழியற்ற
புதியதோர் உலகு பிறக்கட்டும்
அங்கு
ராஜபக்க்ஷே ஹிட்லர் போன்றோரும்
அநியாயத்தைக் கண்டு பொங்காமல்
எழுதிக் கிழிக்கும்
படித்து ரசிக்கும்
நம் போன்ற
கேடுகெட்ட மனிதரெல்லாம்
கருவிலேயே கலைந்து போகட்டும்.
Sunday, May 2, 2010
காற்றுணர்ந்த காதல்
உன்
முகம் படர்ந்த கூந்தலை
கோதிவிட
கைகள் குறுகுறுத்த கணம்
காற்று வந்து
உன் குழல் கலைத்துப் போனது
ஆம்
காற்றும் உணர்ந்த காதல் எனது
Saturday, May 1, 2010
கண்டெடுக்கப்பட்டது
தொல்பொருள் ஆய்வாளன்
என் தொண்டைக் குழியை
குடைந்த போது
கண்டெடுக்கப்பட்டது
என் பதின் வயதில்
நான் சொல்லப் பயந்து
சொல்லாமல் அடைகாத்த
சில சொற்களும்
என் முதல் காதலும்
இன்னும் சிறிது காலம்தான்
என்னை
கம்பளிப்பூச்சி எனப் பார்த்து
இகழ்ந்தன சில வாய்கள்
சுருங்கின சில புருவங்கள்
நான் கூடு புகுந்து விட்டேன்
இன்னும் சிறுது காலம் தான்
வாய்கள் பிளக்கவும்
புருவங்கள் உயர்த்தவும்
இல்லை
நிலவில்
பாட்டி வடை சுட்ட கதை
எல்லா குழந்தைகளுக்கும் சொல்லப்படுகிறது
ஆனால் இதுவரை
யாருக்காக சுடுகிறாள் என்று
எந்த தாயும் சொன்னதுமில்லை
எந்த சேயும் கேட்டதுமில்லை
பாட்டி வடை சுட்ட கதை
எல்லா குழந்தைகளுக்கும் சொல்லப்படுகிறது
ஆனால் இதுவரை
யாருக்காக சுடுகிறாள் என்று
எந்த தாயும் சொன்னதுமில்லை
எந்த சேயும் கேட்டதுமில்லை
Subscribe to:
Posts (Atom)