பிரியமானவளே...
எறும்புகளிடம்
ஜாக்ரதையாக இரு
அவை
இனிப்பைக் கண்டால்
கடத்திச் சென்றுவிடும்
பிரியமானவளே...
எறும்புகளிடம்
ஜாக்ரதையாக இரு
அவை
இனிப்பைக் கண்டால்
கடத்திச் சென்றுவிடும்
உன்னைச் சுற்றும்
என்னைப் பார்த்து
நட்போடு சிரிக்கின்றது
விளக்கைச் சுற்றும்
விட்டில் பூச்சியொன்று.
பல மொழிகள் கற்க
எனக்கு
முப்பதே நாட்கள் பிடித்தது
உன்
விழி மொழி மட்டும்
முப்பது மாதங்களாய்
புரிய மறுக்கிறது
உன் பெயரை
எழுதும்போது
மட்டும்
என் வீட்டில்
பேனாவும் பென்சிலும் கூட
வெட்கப்படுகின்றன