Tuesday, November 10, 2009

ஜாக்ரதையாக இரு

பிரியமானவளே...

எறும்புகளிடம்

ஜாக்ரதையாக இரு

அவை

இனிப்பைக் கண்டால்

கடத்திச் சென்றுவிடும்

இனிக்குது

உன் வீட்டு

உப்புத் தண்ணீர்

ஒவ்வொரு துளியும்

இனிப்பாய் இனிக்குது

விட்டில் பூச்சி

உன்னைச் சுற்றும்

என்னைப் பார்த்து

நட்போடு சிரிக்கின்றது

விளக்கைச் சுற்றும்

விட்டில் பூச்சியொன்று.

புரியவில்லை

பல மொழிகள் கற்க

எனக்கு

முப்பதே நாட்கள் பிடித்தது

உன்

விழி மொழி மட்டும்

முப்பது மாதங்களாய்

புரிய மறுக்கிறது

வெட்கப்படுகின்றன

உன் பெயரை

எழுதும்போது

மட்டும்

என் வீட்டில்

பேனாவும் பென்சிலும் கூட

வெட்கப்படுகின்றன

உன்னைத் தேடி

எல்லா பூக்களிலும்

தேன்

புளிக்கிறதாம்.

உன்

முகவரி தேடி அலைகின்றன

முற்றத்துத் தேனீக்கள்

நீயிருக்க...

கடல் நீரை

குடிநீராக்க

சாதனங்கள் எதற்கு?

நீ

இறைத்துத் தந்தால்

போதாதா!