Saturday, August 28, 2010

கடவுள்

கண்திறந்து பார்க்கும் சாமி
என நம்பி
கண்மூடித் தவமிருக்கும் மூடனே
கண் திறந்து பார்..
கடவுளே நீதான்
என்றுணர்வாய்.

உலகம் அழியட்டும்

மதத்தின் பெயரால்
இனத்தின் பெயரால்
நிறத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
ஆளாளுக்கு
அடித்துக்கொண்டு சாவதை விட
2012- இல்
உலகம் அழிந்து போகட்டும்.
மதம் இனம் நிறம் மொழியற்ற
புதியதோர் உலகு பிறக்கட்டும்
அங்கு
ராஜபக்க்ஷே ஹிட்லர் போன்றோரும்
அநியாயத்தைக் கண்டு பொங்காமல்
எழுதிக் கிழிக்கும்
படித்து ரசிக்கும்
நம் போன்ற
கேடுகெட்ட மனிதரெல்லாம்
கருவிலேயே கலைந்து போகட்டும்.