மதத்தின் பெயரால்
இனத்தின் பெயரால்
நிறத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
ஆளாளுக்கு
அடித்துக்கொண்டு சாவதை விட
2012- இல்
உலகம் அழிந்து போகட்டும்.
மதம் இனம் நிறம் மொழியற்ற
புதியதோர் உலகு பிறக்கட்டும்
அங்கு
ராஜபக்க்ஷே ஹிட்லர் போன்றோரும்
அநியாயத்தைக் கண்டு பொங்காமல்
எழுதிக் கிழிக்கும்
படித்து ரசிக்கும்
நம் போன்ற
கேடுகெட்ட மனிதரெல்லாம்
கருவிலேயே கலைந்து போகட்டும்.