Sunday, September 6, 2009

அம்முச்சி


சின்ன வயசில்


அம்மா என்னை


அம்முச்சி வீட்டில் வளர விட்டாள்


அப்பப்ப வருவாள்


அணைத்து முத்தம் தருவாள்


அக்கா தம்பியை மட்டும்


அழைத்துக்கொண்டு போவாள்


அரண்டு புரண்டு நானழுதால்


அச்சு வெல்லம் ஊட்டிவிட்டு


அடுத்தமுறை போகலாமென்று


அடித்துச் சொல்வாள் அம்முச்சி


இப்போது


அம்முச்சி விட்டுவிட்டு போய்விட்டாள்


அச்சுவெல்லம் கசக்கிறது


நெஞ்சுக் கூட்டுக்குள்


நெருஞ்சிமுள் குத்தியதுபோல்


அப்பப்ப வலியெடுக்கும்


அழுதுவிட்டால் வலி தீரும்

No comments:

Post a Comment