
சின்ன வயசில்
அம்மா என்னை
அம்முச்சி வீட்டில் வளர விட்டாள்
அப்பப்ப வருவாள்
அணைத்து முத்தம் தருவாள்
அக்கா தம்பியை மட்டும்
அழைத்துக்கொண்டு போவாள்
அரண்டு புரண்டு நானழுதால்
அச்சு வெல்லம் ஊட்டிவிட்டு
அடுத்தமுறை போகலாமென்று
அடித்துச் சொல்வாள் அம்முச்சி
இப்போது
அம்முச்சி விட்டுவிட்டு போய்விட்டாள்
அச்சுவெல்லம் கசக்கிறது
நெஞ்சுக் கூட்டுக்குள்
நெருஞ்சிமுள் குத்தியதுபோல்
அப்பப்ப வலியெடுக்கும்
அழுதுவிட்டால் வலி தீரும்
No comments:
Post a Comment