என்னை
கம்பளிப்பூச்சி எனப் பார்த்து
இகழ்ந்தன சில வாய்கள்
சுருங்கின சில புருவங்கள்
நான் கூடு புகுந்து விட்டேன்
இன்னும் சிறுது காலம் தான்
வாய்கள் பிளக்கவும்
புருவங்கள் உயர்த்தவும்
No comments:
Post a Comment